வியாழன், 12 நவம்பர், 2015

கார்காலம்!

அது ஒரு காலம் கண்ணே! அதுதான் கார்காலம்! எங்கும் மழை…எதிலும்…,மரங்களிலும்,குடிசைகளிலும்,பள்ளிகளிலும்,பாடங்களிலும்… அரசுப் பேருந்துகளிலும் மழை! தூரத்தில் ஒரு மரம்.……!தண்ணீர் விழுதுகளைத் தரைக்கனுப்பிக் கொண்டிருக்கும் மரம்.அந்தக் குடை ஒழுகும் என்று அறிந்திருந்தும் ஒதுங்கினேன்!என் கனவுகளைக் காயம் செய்த அவளும்…நனவுக் கன்னியாக மாறி…அருகில் ஒதுங்கினாள்!எங்களைப் பூ தூவி வரவேற்றது அந்த மரம்!சேமித்து வைத்திருந்தத் தண்ணீர்க் காசுகளை தாராளமாக …அந்த இலைகள்  எங்களுக்காக செலவு செய்தன! நீர்த் திவலைகள் அவள் தலைக்கூந்தலுக்கு நேர் வகிடெடுத்து …அந்த ஒத்தையடிப் பாதையில் ஓடிச்கொண்டிருந்தன! அந்த கண்கொள்ளாக் காட்சியளித்த மழைக்கு நன்றி!நான் என் பெருமூச்சில் …குளிருக்கு விடை கொடுத்தேன்!எங்கள் இருவருக்கிடையில் …நாற்காலி போட்டு அமர்ந்திருந்ததோ…வெறுக்கத் தக்க அந்த நாகரிகம்! எவ்வளவோ பேசத் துடிக்கும் மனம் மத்தியில் …மௌனம் பசை தடவி ஒட்டப்பட்டிருந்தது!அந்த ……அன்று மலர்ந்த அவள் மலர் முகத்தில் …பனித்துளியாகிவிடும் பயத்தில்…நீர்த்துளிகள் …பட்டுத் தெறித்தன! காணக் கண் கோடி தேவை! இதோ ஒரு வாய்ப்பு…கதவைத் தட்டுதே! அவளுக்குப் பொன்னாடைப் போர்த்தும் …ஜொள்ளில் …எனதுக் கைக்குட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன்! அதை ஏற்றுக் கொண்டபடி அவள் நெற்றி ஒத்தி… திருப்பித் தந்தாள் .என் கவலையெல்லாம் …மழை நிற்க வேண்டாம்.அந்தக் கைக்குட்டை உலரவேண்டாம்…அதற்கு ஏதேனும் உத்தி உண்டா……? கூகுள் செய்து தேடிக் கொண்டிருந்தது…என் மனம்! மாறாக……மழை சனியன் நின்று தொலைத்தது!அவள் விடை பெற்றாள்…! ஆனால் அவள்… சிரிப்பில் ………நன்றி சொல்லிய அந்த அபூர்வப் புன்னகைமட்டும்  எனக்கே…எனக்கு! எனக்கது போதுமென்றது …என் போதும் என்ற நல்ல மனம்!அவள் சென்றே மறைந்தாள்!
அப்போது…வெளியில் நின்ற அந்த மழை …என்னுள் பெய்தது……! ஆனால்…இந்த மழை …சனியன்மழை  அல்ல!இனிக்கும் மழை! இதமான மழை!
அது ஒரு காலம் கண்ணே! …………கார்காலம்! கனிந்ததோர்க் கார்காலம்!!!!😃😃!!!

சனி, 7 நவம்பர், 2015

குடியின் அநுபவம்?

பட்ச்சாகீதை!
குட்ச்சா போதை!
குட்காதேன்னு சொல்றியே……குட்க்காம…உன்னால …மங்களூர்ல தல வச்சு …மலேயால கால நீட்ட முடியுமா? இல்ல…காக்காதான் குயிலாப் பாடுமா? கழுதைய குதிரையாப் பாக்க முடியுமா? பாடுறப்போ அது பாங்காக் ஆகுமா? ஆடுறப்போ அது ஆஸ்திரேலியாஆகுமா?
சர்தான்…குடி குடியக் கெட்க்குமாமே…குடிச்சுதான் குடியக் கெடுக்குன்மா என்ன? மீதியெல்லாம்  …லாங்…ரூட்ணு வேணா…சொல்க்கோ……! இத்தான் உடம்பையும் குடியையும் ஒண்ணாக் கெட்க்ற…ஷாட் …ரூட்…மச்சீ……! சர்யா……? வர்ட்டா…?

' எங்கள் வாட்ஸப் குடும்பம் '

தீபாவளித் திருநாள் …ஒரு செவ்வாய்க் கிழமை. அன்று கூடவிருக்கும் எங்கள் குடும்பம் பற்றி…ஒரு கவி முயற்சி:

பூவே, பூவே ,ஏன் பரபரப்பாய்  பூத்தாயோ?எங்கள் கூட்டம் செவ்வாயன்று காண்பதற்கோ! மயிலே…தப்பா ஆடாத நில்லு! நாங்களும் ஆடுவோம் நின்னு பாரு! அலைகள் வந்து மோதாமல் கடலின் கரைகள் கிடையாது!எந்த அலைகள் அடித்தாலும் எங்கள் சொந்தம் உடையாது!ஆயிரம் கோடி செல்வம்…யாருக்கு இங்கே வேணும்!அரை நொடி என்றால் கூட …இந்த ஆனந்தம் ஒன்றே போதும்!எங்கள் ஒற்றுமைக் கதை கேட்டு …எல்லா கிரகமும் ஒண்ணா சேரவே துடிக்கும்! உதிர்ந்த இலைகள் மீண்டும் கிளைகள் சேறும்!இதைக் கண்டும் காணாமல் இயற்கையும் வியக்கும்!வேலிகள் இங்கே கிடையாது!எந்த வெள்ளமும் நெருங்காது! இது நிலவில் கொஞ்சும் கிள்ளைகள் இசைப் பாட்டு! இதற்கு ஈடு எத்தனை SPB,ஜானகியும் கிடையாது!இது மழலைகள் பாடும் தாலாட்டு!எல்லாத் தாய்களும் உறங்கும்…இதைக் கேட்டு!கேட்டு!

வாழ்வின் நோக்கம்? …ஒரு ஆய்வு


நாம் பிறந்த காரணம் என்ன?
மற்றவர் மரணம் மற்றும் அகால மரணம் நிகழ்ந்தும்  …நம்மைக் கடவுள் நம்மை விட்டு வைப்பதன் நோக்கம் என்னவாக இருக்கக்கூடும்?
அப்படியென்றால் நம் வாழ்வின் நோக்கம் என்னவாக இருக்கக் கூடும்……பார்க்கலாம்:
- வாழும்வரை சுவாசிக்க வேண்டும் என்பதா?
- மூன்று வேளைக்கு உணவு தேட முப்பொழுதும்  அலைவதா?
- மற்றவர் செய்யாததை செய்ய முயன்று மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற கவனமே லட்சியமாக வாழ்ந்து மடிவதா?
- இனப்பெருக்கம் செய்வதா?
- அதில் இன்பம் கண்டபின்…விளைவுகளுக்கு விடுதலை தேடுவதா?
- சந்திர,சூரியனைஇரவு,பகலாக புரிந்து கொள்வது மட்டுமா?
- அல்லல் பட்டு அரைகிரவுண்டு வாங்கி…அதில் வாடகைக்கு விட வீடு பெறுவதா?
- எதிர்கால பயத்திற் கிணங்க அரை வயிறு உண்டு…கடைசிவரை சேமித்தே சாவதா?
- ஆசை ஆசையாய் கார் வாங்கி…தினம் தினம் துடைத்து அழகு பார்த்து…ஓட்டினால் செலவு என்று…ஆயுதபூஜை செய்து ஆராதிப்பதா?
- முயலும் காரியம் பிறரிடம் பகிர்ந்தால் முற்றுப் பெறாது என்ற மூட நம்பிக்கைக்குப் பயந்து…நம்நலம் விரும்பிகளிடமும் மறைத்து மறைத்து கவனமாக தூக்கமிழப்பதா?
- செலவுகள் நியாயமாக இருக்கவேண்டுமென்று…அநியாயமாய் பொத்திப் பொத்தி பொட்டியைப் பாதுகாப்பதா?
- அதனால்…,வழங்கப் பட்ட சிறகுகள் கொண்டும் …நடந்தே சிக்கணம் வெல்வதா?
- மூன்று வேளைத் தின்று…ஒரு வேளை ஒழுங்காகக் கழிப்பதா?
- இந்த மூன்று வேளை முக்கோண வாழ்வின் முழுமையறிய முயற்சியின்றி முடிந்தே…போவதா?……சிந்தனை …செய்…மனமே!

( This is not a forwarded msg. )

ஒரு கவிதையின் கதை

ஒரு கவிதையின் க(வி)தை:

காலம்…துளித்துளியாய்ச் சொட்டிக் கொண்டேயிருக்கிறது…தாவரங்கள், உயிர்கள்,கிரகங்கள்,மனிதர்கள்…என்று! காலம் அவ்வாறு சிதறும்  துளிகளைச் சேமித்து வைக்கக் கண்டறிந்த ஒரு அருமையான கலனே கவிதை!இறந்துபோனக் காலங்களின் உணர்ச்சிகளை உயிர்ப்பிப்பன கவிதைகள்!மரணத்தை நியாயப் படுத்தும் காலத்தின் முன் வாழ்க்கையை நியாயப் படுத்துபவைக் கவிதைகள்!காலம் இருள் கொண்டு பயமுறுத்தும்! இருளையே …குறைந்த வெளிச்சம் எனக்  கூறி மனிதனை ஊக்குவிக்கும் கவிதை! கவிதை, மழலையின் கண்கொண்டு உலகைக் காணச்சொல்லி…ஞானியின் மனம் கொண்டு வாழச் சொல்லும்!புறக்கண்ணில் விஞ்ஞானம் கண்டவைகளை…அகக்கண் கொண்டுஆராய்ந்து அவைகளை ரசிக்கச் செய்வன…கவிதை!வாழ்வை வியக்கச் சொல்லிக்கொடுக்கும் இவை!பாசிப் படர்ந்த குளம் இவ்வுலகம்!அதன் நடுவே பூத்திருக்கும் வசீகரத் தாமரை…வாழ்க்கை!பாசி விலக்கி…தாமரைக் கொஞ்ச…வழி வகுக்கும் கவிதை!மனிதகுலம் பயன்படுத்தித் தேய்ந்த வார்த்தைகளில் கவிஞனுக்கு உடன்பாடில்லை!ஆகவே,கைக்கு சிக்கிய அந்த கருப்பு வெள்ளை வார்த்தைகளுக்கு…வண்ணம் தீட்டி அழகு பார்ப்பானவன்!வாழ்ந்து முடிந்த வலிகளை அசைபோட்டுப் பார்க்கும்போது அவையே அவனுக்கு வரமாகப்படுகிறது!விஞ்ஞானம் விளஙக்குவைத்துத் தேடுவதை…கண்கள் மூடிக் கண்டறிவது கவிதை!

வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு…தூரமும், இதயமும் சுருங்கிப் போன இந்த கணிணியுகத்தில்
நழுவிக் கொண்டிருக்கும் மனிதத்தை இறுக்கிப் பிடித்துக் கற்றுக் கொடுக்கிறது கவிதை!

வாழ்வின் வலி தாங்க…வானவில் ரசிக்க…புயலையும் பூகம்பத்தையும் எதிர்கொள்ள…சக உயிர்களை நேசிக்க…சேமித்தக் கண்ணீரை அன்புக்குச் செலவழிக்க…கற்றுத் தரும்  ……ஆசான்……கவிதை! கவிதை!!