புதன், 23 டிசம்பர், 2015

வாழ்வியல்

நல்லவை செய்பவர்க்கும் …அல்லவை… அடிக்கடி, அலை அலையாய் வந்து போகும்! அவற்றைத் தாண்டும் பக்குவம் கொண்டால்…மகழ்ச்சிப் பெருங்கடல் மனதில் விரியும்!
இன்பம் விளைகளில் என்ன செய்தோம் என்று நினைப்பவன் யாருமில்லை!துன்பம் வருகையில் மட்டும் …துருவித் துருவித் துன்பம் அடைகிறோம்!அலசுகிறோம்!ஆய்வுகள் செய்யும் ஆய்வுக் கூடம் அல்லவே வாழ்வு!தனக்கும் மீறி வருவது வரட்டும் எனும் துணிவே துணை!பலம்!நேர்மறை எண்ணம் கொண்டோன் …நிம்மதி கொள்வான் என்கிற நோக்கில்…கவித்துவமும் கலந்த வாழ்வில்…கவித்தீர்ப்புக் கட்டாயம் உண்டு!
பிறக்கும் போது கள்ளம்,கபடம் அற்ற ஞானியாய்ப் பிறந்த நாம் ,வளர வளர ,தெரிந்தே நமக்குள் அசுத்தம் சேர்த்தோம்!உலகை வெல்ல  தேவை என்றென்னி கள்ளம் பயின்றோம்!அதன்பின் பட்டுப்பட்டுப் பிறகே…தெளிவைப் பெற்று…மனதின் களைகள் களையவே முயன்றோம்!ஆனால் அவையோ  மரமாய் வளர்ந்தே மலைப்பைத் தருமே!
ஆக, மீண்டும் குழந்தையாய் மாறி அதற்குள் இருக்கும் அருமனம் அறிந்தால்…மீண்டும் ஞானியாய் …இறக்காமலே பிறக்கலாம்! 👭 !!.

சனி, 19 டிசம்பர், 2015

சிரிப்பு

சிரிப்பு:
உதடுகள் தொழில்கள்  ஆறு:சிரித்தல்,முத்தமிடல்,உண்ணல்,உறிஞ்சல்,உச்சரித்தல்,இசைத்தல்.
அதில் ,சிரிக்கத் தெரியாத உதடுக்கு…மீதி ஐந்தும் WASTE ! பூட்டிக் கிடக்கும் வாழ்வைத் திறக்க வல்லது…இந்த சாவி! சர்வ தேச எந்த உதடும் இம்மொழி பேசும்!சிரிப்பில் வரும் கண்ணீர் கரிப்பதில்லை!ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும்…மனம் ஒட்டடை அடிக்கப் படுகிறது!ஆனால்,சிரிப்பும் …முரண்பட்டால் ஆபத்தே!சிரிக்கக் கூடாத இடத்தில் ஒருத்தி சிரித்துத் தொலைத்தாள்…அதுதான் பாரதம்!ஒருத்தி சிரிக்க வேண்டிய இடத்தில் …சிரிப்பைத் தொலைத்தது…இராமாயணம்! ஒருவர் தனியாக சிரித்தால் …? விளக்க வேண்டிய அவசியமே…இல்லை!பகலில் பலருடன் சிரிக்கத் தெரியாதவர்க்கு…மரணம் படுக்கைத் பட்டிப் போடத் துடித்துக் கொண்டிருக்கும்!ஒரு குழந்தை சிரிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு விசாலத் தோட்டம் முழுக்கப் பூத்துக் குலுங்கும் மலர்களும் …அதன்முன் ஏமாந்து போகும்!சிரிப்பு…காதலின் முன்னுரை!கடனுக்கு மூலதனம்! உதடுகள் சந்ரோதயம்!விலங்கு நீக்கிய மனித மிச்சம்!மனிதா சிரி! மரிக்கும்வரை சிரி! மரணம் யோசிக்க…சமயம் கொடு! ஜீவ அடையாளமல்லவா இந்த சிரிப்பு!ஒவ்வொரு சிரிப்பிலும்  ஒரு அங்குல ஆயுள் நீளும் என்று சொன்னால்…நம்பு! ஜோசியனை நம்பும் நீ…இதையும் நம்பி……சிரி…சிரி!சிரிக்கத் தெரிந்த உதடுகள்…துப்பட்டுமே…துன்பம்!!!!!😃😃😃😃😃!

சனி, 12 டிசம்பர், 2015

Super star birthday

இன்று சூப்பர் நட்சத்திரம் பிறந்த தேதி!  தேதியும், மாதமும் பனிரெண்டாய் தொடங்கியப் பயணம்!புகழின் உச்சியில் ஒரு ஜன்மம்! அதன் படப்பிடிப்பு என்றால்… செவ்வாய் கிரகத்திலும் கூட்டம் கூடும் !நடிப்புக்கோர் சிவாஜி …என்றால் தனக்கென்று ஓர் தனிவழிகண்ட ஓர் சிவாஜி ராவ்! வேற்று மண்ணில் பிறந்தும் தமிழ் நாடே போற்றும் புகழ்!குறுகிய காலத்தில் பட்டினியையும், பட்டத்தையும் ருசித்த அனுபவத்தில் அறிந்த பாடம்……" திருப்தி என்பது பொருளில் அல்ல அது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்! " மனிதனாக வாழ முயல தினமும் வாழ்க்கைப் புத்தகம் வாசிப்பவர்!சம்பந்தமில்லாதத்  துறையிலும் ஞானியாகத்  திகழ்பவர்! அரசியல் அழைத்தும் அதைப் பற்றித் தெளிந்ததால் …அதை அலட்சியப் படுத்துபவர்! எந்த அந்தஸ்திலும் எளிமை,பணிவு கொண்ட ஒரு வித்தியாசம்! வாழ்கப் பல்லாண்டு!

இவரையும் இப்படி வாழ்த்தலாம்! இது எப்படி இருக்கு!😃!!