ஆவி போகும் வரை ,காத்திருக்குது அன்பு
அந்த கிராமத்தில் ஓர் இந்து வாலிபன் மற்றும் ஒரு கிருத்துவக் கிளி.ஒரு நாள் அவர்கள் பார்வை உரச,மலர்ந்தது காதல்.ஒரே நொடியில் விதைத்து,முளைத்து,விருட்சமாகிவிடும் .... மரம் இது ஒன்றே!மாதாகோயிலில் மேரி அந்த ராஜாவுக்காக ஜெபிக்கிறாள்!அம்மன் கோவிலில் அவன் மேரிக்காக அர்ச்சனை செய்கிறான்!மேரியின் அண்ணன் ஆல்பட் தங்கையின் காதலறிந்து ,ஆதரிக்கிறான்! இங்கு தான் ஆபத்து முளைக்கிறது!இரு குடும்ப மனிதர்கள் மதம் பிடித்து மதவாதிகளாகி ....கிளிகள் சிறகொடித்து சிறை வைக்கிறார்கள்!மதவெறியர் மனம் மாற ஆல்பட் ஓர் நாடகம் அரங்கேற்றுகிறான்.காதலர்களை இறந்தவர்களாக நடிக்கச் செய்கிறான்!அவன் எதிர்பார்ப்பின்படி,பெற்றோர்கள்....இப்படி நேரும் எனத் தெரிந்திருந்தால் திருமணம் செய்துவைத்திருப்போமே என்று கலங்குகிறார்கள்!
இதற்காகக் காத்திருந்த ஆல்பட் அவர்களை எழுப்புகிறான்!ஆனால் அந்த இளம் குருத்துக்கள் நிஜமாகவே....... ஐயகோ...... பெற்றோரைப் புண்படுத்தி நாங்கள் வாழ விரும்பவில்லை என்று ..அவர்கள் எழுதிவைத்திருந்த கடிதமொன்று....கதறியபடிப் பேசியது.ஆல்பட் இடிந்தான் !ஆவிபோன பின்பு.....அழுது பார்க்குதிங்கு அன்பு !!😢!!
இதற்காகக் காத்திருந்த ஆல்பட் அவர்களை எழுப்புகிறான்!ஆனால் அந்த இளம் குருத்துக்கள் நிஜமாகவே....... ஐயகோ...... பெற்றோரைப் புண்படுத்தி நாங்கள் வாழ விரும்பவில்லை என்று ..அவர்கள் எழுதிவைத்திருந்த கடிதமொன்று....கதறியபடிப் பேசியது.ஆல்பட் இடிந்தான் !ஆவிபோன பின்பு.....அழுது பார்க்குதிங்கு அன்பு !!😢!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு