கதாசிரியரும் கவிஞரும்
கதாசிரியர்:அவன் ஓடிச் சென்றுப் பட்டாம் பூச்சிப் பிடித்தான்!
கவிஞர்:
தேன் குடித்த மயக்கத்தில்,தன்னை மறந்திருந்தது,ஒரு வண்ணத்துப் பூச்சி ! தூங்கும் குழந்தைக்கு நகம் வெட்டும் தாயாய் அதன் உறக்கம் கலையாமல் அதன் இறக்கையைப் பிடித்தான் !
கதா:காற்றே வீசவில்லை!
கவி:மரத்தின் இலைகள் கூட , சாவி கொடுக்காத கடிகார முட்களாய்ச் சட்டென்றே நின்றன! காற்று,தன்னை நிறுத்திக் கொண்டது!
கதா:உலகம் கசந்தது!
கவி:பிள்ளை வயதுக் கண் கொண்டு - இந்தப் பிரபஞ்சத்தைக் கொஞ்சம் காணத் தவறியதால்.... அவனுக்கு இந்தப் பூவுலகம் பாரமானது!
கதா:அவன் அறிவுரை நாடி,ஒரு குருவிடம் சென்றான்!
கவி: மனம் குழம்பிய நிலையில்,ஒரு சாதுவைத் தேடிச் சென்றான்! சிந்தனைத் தெளிவு பெற்று இனிதே வாழ வழியுண்டா?என வினவினான்! அவர்...விளக்கமளித்தார்:துக்கம் கொண்டது கால் ஆயுள்!தூக்கம்கொண்டது கால் ஆயுள்!ஏக்கம் கொண்டது கால் வாசி! இதில் மிச்சமிருப்பதோ மீதி வாசி!அதில் , துருப்பிடித்துப்போன புலன்களை துடைக்க வேண்டாமா?நீ தவரவிட்ட,இன்னும் வாழப்படாத ஒரு வாழ்க்கை உள்ளது!அதைச் சிறப்பாக வாழ.... வாழ்ந்து காட்டுபவர்களைத் தேடி கண்டு கொள் ! வாழும் காலம் ஒரு முறை ! இதுவரை இழந்த வாழ்வை இன்றாவது மீட்டுக்கொள் !பொழுதைப் பொன் கொடுத்து வாங்கியிருந்தால் ,
வீணடிக்க மனம் வருமா?இந்தப் பூமியில் பிறந்ததற்காகவும் ,அதில் மனிதப் பிறவியாய்ப் பிறந்ததற்காகவும் ,அதில் ,இந்தக் குடும்பத்திலும்,சுற்றத்திலும் பிறந்ததற்காகவும்,பெருமை கொள்!
இந்த வரத்தை ...தக்க வைத்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்!
கவலையை தூரத் துரத்து!கவிகளை நெஞ்சில் நிறுத்து!தவளை வாழ்க்கை வாழாமல்- சில தவங்கள் புரிந்தே வாழ்! வாழ்க வளமுடன்......!என்றே ஆசீர்வதித்து ,வாழ்த்தி அருள்ந்தார்!
கவிஞர்:
தேன் குடித்த மயக்கத்தில்,தன்னை மறந்திருந்தது,ஒரு வண்ணத்துப் பூச்சி ! தூங்கும் குழந்தைக்கு நகம் வெட்டும் தாயாய் அதன் உறக்கம் கலையாமல் அதன் இறக்கையைப் பிடித்தான் !
கதா:காற்றே வீசவில்லை!
கவி:மரத்தின் இலைகள் கூட , சாவி கொடுக்காத கடிகார முட்களாய்ச் சட்டென்றே நின்றன! காற்று,தன்னை நிறுத்திக் கொண்டது!
கதா:உலகம் கசந்தது!
கவி:பிள்ளை வயதுக் கண் கொண்டு - இந்தப் பிரபஞ்சத்தைக் கொஞ்சம் காணத் தவறியதால்.... அவனுக்கு இந்தப் பூவுலகம் பாரமானது!
கதா:அவன் அறிவுரை நாடி,ஒரு குருவிடம் சென்றான்!
கவி: மனம் குழம்பிய நிலையில்,ஒரு சாதுவைத் தேடிச் சென்றான்! சிந்தனைத் தெளிவு பெற்று இனிதே வாழ வழியுண்டா?என வினவினான்! அவர்...விளக்கமளித்தார்:துக்கம் கொண்டது கால் ஆயுள்!தூக்கம்கொண்டது கால் ஆயுள்!ஏக்கம் கொண்டது கால் வாசி! இதில் மிச்சமிருப்பதோ மீதி வாசி!அதில் , துருப்பிடித்துப்போன புலன்களை துடைக்க வேண்டாமா?நீ தவரவிட்ட,இன்னும் வாழப்படாத ஒரு வாழ்க்கை உள்ளது!அதைச் சிறப்பாக வாழ.... வாழ்ந்து காட்டுபவர்களைத் தேடி கண்டு கொள் ! வாழும் காலம் ஒரு முறை ! இதுவரை இழந்த வாழ்வை இன்றாவது மீட்டுக்கொள் !பொழுதைப் பொன் கொடுத்து வாங்கியிருந்தால் ,
வீணடிக்க மனம் வருமா?இந்தப் பூமியில் பிறந்ததற்காகவும் ,அதில் மனிதப் பிறவியாய்ப் பிறந்ததற்காகவும் ,அதில் ,இந்தக் குடும்பத்திலும்,சுற்றத்திலும் பிறந்ததற்காகவும்,பெருமை கொள்!
இந்த வரத்தை ...தக்க வைத்துக் கொள்ளும் கலையைக் கற்றுக் கொள்!
கவலையை தூரத் துரத்து!கவிகளை நெஞ்சில் நிறுத்து!தவளை வாழ்க்கை வாழாமல்- சில தவங்கள் புரிந்தே வாழ்! வாழ்க வளமுடன்......!என்றே ஆசீர்வதித்து ,வாழ்த்தி அருள்ந்தார்!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு