புதன், 19 அக்டோபர், 2016

மகள் ரூபாவின் பிறந்தநாள் வாழ்த்து

மகளே,மரகதமே!மண்ணில் விளைந்த பொன் தாமரையே! பொருள் வளர்க்கும் மீதினியில் குணம் போற்றும் குலமகளே! எந்நிலையிலும் சிரிக்கத்தெரிந்த ஜீவனுள்ள எங்கள் சிற்பமே!நாங்கள் ஈன்ற நந்தவனமே! தடாகமே வியக்கும் தாமரையே! காற்றில் கண்டெடுத்த... தேனிசைத் தென்றலே!உன்னால் பெருமை பெற்ற பெற்றோர் நாங்களே!

வயலின் மீட்டி இசைத்திடுவாள் உந்தன் மகள்! அந்த ஸ்வரங்களில் மயங்கியே லயித்திருப்பாள் எந்தன் மகள்! தங்கம் வேண்டாம்,தாய் வேண்டும் என்பான் உந்தன் மகன்! அதைக்கேட்டபடி ரசித்திடுவார் எந்தன் (மரு)மகன்!

உங்களுக்கெல்லாம் அங்க ஒரு ஒபாமா,மிச்சேல் ஒபாமா ! எங்க சார்பா உங்களுக்கு,அவுங்க ஒரு நல்ல அப்பா,அம்மா!

போதுமாம்மா?

இன்று பிறந்தநாள் காணும் நின் பண்புகள்,எனக்கு எழுத்துக்களோடு சரி!குறை காணா குணம் வளர்க்கும் குற்றாலமே!நீ வாழ்க!நின் குடும்பம் நிதமும் மகிழ்ச்சியுடன் வாழ்க!
பல்லாண்டு வாழ்க! பல வளமும் பெறுக! வாழ்க! வாழ்க!என அன்பு கொண்டு வாழ்த்தி மகிழ்கிறோம்!
_HAPPY BIRTHDAY_!😀!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு