புதன், 19 அக்டோபர், 2016

கதாசிரியர் : அப்போது அவனுக்கு சிறுவயது !
கவிஞர் :
அப்போது அவனுக்கு
கூழாங்கல்லில் நடந்து,வைரங்களைக் கனவு கண்டு கொண்டிருந்த வயது!

கதா: வேண்டியவற்றை கற்பனையில் பெற்று வாழ்ந்த நேரம் !
கவி: செருப்பில்லாத பாதங்களோடு நடக்கும் போதும் ,சிவப்புக் கம்பளக் கற்பனை செய்து கொள்ளும் மமதைக் காலம்!

கதா: ஏழ்மையிலும் பணக்கார நினைவுடன் வாழ்ந்தான் !
கவி:
இந்த பூமியின் இயவரசனாகவும் , தற்காலிகமாகப் பிச்சைக்கார வேடத்தில் இருப்பதாகவும் நினைப்பு!

கதா: இதுதான் என்றில்லாமல், எல்லையற்ற யோசனைகளில்  காலம் கழிந்தது!
கவி:நட்சத்திரங்களின் சிமிட்டல்களைக் கூட,...வானம் தன்னைப் பார்த்துக் கண்ணடிப்பதாக எண்ணிக்கொள்ளும்,ஒரு பூனையைப் போல....எல்லாக் கண்களும் தன்னையே மொய்ப்பதாகத் தனக்குள் ஒரு கனா போதை.......

கதா: பள்ளியில் பிரார்த்தனைக் கூட்டத்தில் செய்தி வாசிக்கும் பொறுப்பு வந்தது!
கவி: பள்ளியில் காலைக் கூட்டத்தில் செய்திவாசிப்பதை அவன் சிலுவைச் சுமையாக எண்ணாமல்,ஒரு மலடியின் கர்ப்பச்சுமையாக நினைத்து மகிழ்ந்தான் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு