உறவுகள்:
அவர் ஒரு முயல் வளர்த்தார் ! முயலோடு செலவிடும் நேரம்,வாழ்வின் வரவானது!வெல்வெட் உடம்பில் விரல் கோதுவார்! குறுகுறு கண்களில் , குழந்தை காண்பார்!புல்கொறிக்கும் பற்களில் விரல் வைத்துக் கடிக்கச் சொல்லி மன்றாடுவார்! அதன் இருகாதுகள் இணைந்தாடுவதில்,தன்னை மறப்பார் ! கோதுமை பார்லி துடைத்த கேரட் துண்டுகள்,முட்டக்கோஸின் முற்றா இலைகள் ,பரிவோடு ஊட்டுவார் !தான் பருகும் தரத்தில் தண்ணீர்த் தருவார்!அவர்க் காலடி ஓசையில் காது குவித்து,தன்னை அடையாளம் கண்டு,ஒலியெழுப்போதெல்லாம்,எஜமான் பெருமையில் நிஜமாய் மகிழ்வார்! மனிதனைவிட பாயின்ட் ஒன் பாசம் அதிகம் என்றுணர்வார்! அது வாழ்வின் அன்றாட பாகமாயிற்று! நாட்கள் சென்றன!பாலூற்றி வளர்த்த பிறை,முழு நிலவாயிற்று!
அந்த நாளும் வந்தது!
முயல் வளர்த்த, விஞ்ஞானி , மூக்கோடு மூக்கு வைத்து முத்தமிட்டார்!
ஒரு காது பற்றி உயரே தூக்கினார்!
இனப்பெருக்க உறுப்பு வழி......எய்ட்ஸ் கிருமி ஏற்றினார்!
சிலநாளில் அது கசங்கிய காகிதமாய்ச் சுருங்கியது!
பின்னொரு நாள் மயங்கிய முயல் தூக்கி மாற்று மருந்தேற்றினார்!
ஒரு ஞாயிறுப் பிற்பகலில் அந்த வெள்ளி ஓடை,அசைவதை நிறுத்திக் கொண்டது!
துக்கமுற்றார் விஞ்ஞானி,மருந்து செத்துப் போயிற்றே என்று மட்டும்!
சோதனையே வாழ்வாய்,வாழ்வே சோதனையாய்....குணம் வற்றிப் போன,குடும்ப உறவுகளில்,நம்மில்,
யார் விஞ்ஞானி ??
யார் முயல் ???
அவர் ஒரு முயல் வளர்த்தார் ! முயலோடு செலவிடும் நேரம்,வாழ்வின் வரவானது!வெல்வெட் உடம்பில் விரல் கோதுவார்! குறுகுறு கண்களில் , குழந்தை காண்பார்!புல்கொறிக்கும் பற்களில் விரல் வைத்துக் கடிக்கச் சொல்லி மன்றாடுவார்! அதன் இருகாதுகள் இணைந்தாடுவதில்,தன்னை மறப்பார் ! கோதுமை பார்லி துடைத்த கேரட் துண்டுகள்,முட்டக்கோஸின் முற்றா இலைகள் ,பரிவோடு ஊட்டுவார் !தான் பருகும் தரத்தில் தண்ணீர்த் தருவார்!அவர்க் காலடி ஓசையில் காது குவித்து,தன்னை அடையாளம் கண்டு,ஒலியெழுப்போதெல்லாம்,எஜமான் பெருமையில் நிஜமாய் மகிழ்வார்! மனிதனைவிட பாயின்ட் ஒன் பாசம் அதிகம் என்றுணர்வார்! அது வாழ்வின் அன்றாட பாகமாயிற்று! நாட்கள் சென்றன!பாலூற்றி வளர்த்த பிறை,முழு நிலவாயிற்று!
அந்த நாளும் வந்தது!
முயல் வளர்த்த, விஞ்ஞானி , மூக்கோடு மூக்கு வைத்து முத்தமிட்டார்!
ஒரு காது பற்றி உயரே தூக்கினார்!
இனப்பெருக்க உறுப்பு வழி......எய்ட்ஸ் கிருமி ஏற்றினார்!
சிலநாளில் அது கசங்கிய காகிதமாய்ச் சுருங்கியது!
பின்னொரு நாள் மயங்கிய முயல் தூக்கி மாற்று மருந்தேற்றினார்!
ஒரு ஞாயிறுப் பிற்பகலில் அந்த வெள்ளி ஓடை,அசைவதை நிறுத்திக் கொண்டது!
துக்கமுற்றார் விஞ்ஞானி,மருந்து செத்துப் போயிற்றே என்று மட்டும்!
சோதனையே வாழ்வாய்,வாழ்வே சோதனையாய்....குணம் வற்றிப் போன,குடும்ப உறவுகளில்,நம்மில்,
யார் விஞ்ஞானி ??
யார் முயல் ???
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு