உறவென்று நெருங்கி வாழ்தல் சரியா? துறவென்று ஒதுங்கி வாழ்தல் சரியா?
ஒரு அலசல் :
வீடு வெறுத்து காடு வந்து ,பறவைகளின் பாடல்கள் ,அருவிகளின் சங்கீதம்,முத்து நீரூற்று,மூலிகைக் காற்று,பூக்களின் வாசம்,தனிமையின் சிநேகம்,இவைகளோடு தனதிஷ்டம் போல வாழும் வாழ்க்கை இனியதா? உறவு தேடி வந்து உயிர் பிதுங்கும் அவஸ்த்தை வாழ்க்கை இனியதா?
லௌகீகம் சிக்கல் தான்;உலகம் ரணம் தான்; உறவு சுமை தான்.எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா?தழுவி வாழ்வதா?தள்ளி வாழும் வாழ்க்கையில் அமைதி இருக்கலாம்.அது மயான அமைதி.தழுவி வாழும் வாழ்க்கையில் சப்தம் இருக்கலாம் .அது உயிருள்ளது.வாழ்க்கை என்பது சோபனங்களின் சொப்பனங்காக எண்ணி , வாழ்க்கையோடு கோபித்துக் கொண்டு ,முதுகு திருப்பி ,வெறுமை காண்பது ஒரு வித அறியாமையே.நாள் என்பது இருளையும் சேர்த்துதான்;பூ என்பது முள்ளோ/காம்போ சேர்ந்ததுதான்;கடல் என்பது நுரைகளைக் கொண்டதுதான்; வாழ்க்கை என்பது ரணங்கள் சேர்ந்ததுதான்.
சிரிக்க வேண்டும்;அழவும் வேண்டும்.
துய்க்க வேண்டும்;துயரமும் வேண்டும்.
பாசம் வேண்டும்;பகைமையும் வேண்டும்.
எல்லாம் கலந்த கலவைதான் வாழ்க்கை.
தான் மண்ணுக்குள் புதைய சம்மதிக்காவிட்டால்,முளைக்க முடியுமா விதை ?
துயரங்களை ஏற்கப் பழகு;துன்பங்களில் சிரிக்கப் பழகு.
சோகங்களை எரிக்கப் பழகு; கண்ணீரை செரிக்கப் பழகு.
அக்கரைப் பச்சையாகத் தெரியும் அங்குப் போகும் வரை!
ஆக, வந்த வாழ்க்கையை நேசிக்கப் பழகு,வாழப் பழகு!
ஒரு அலசல் :
வீடு வெறுத்து காடு வந்து ,பறவைகளின் பாடல்கள் ,அருவிகளின் சங்கீதம்,முத்து நீரூற்று,மூலிகைக் காற்று,பூக்களின் வாசம்,தனிமையின் சிநேகம்,இவைகளோடு தனதிஷ்டம் போல வாழும் வாழ்க்கை இனியதா? உறவு தேடி வந்து உயிர் பிதுங்கும் அவஸ்த்தை வாழ்க்கை இனியதா?
லௌகீகம் சிக்கல் தான்;உலகம் ரணம் தான்; உறவு சுமை தான்.எந்த வாழ்க்கை முறை சரி? தள்ளி வாழ்வதா?தழுவி வாழ்வதா?தள்ளி வாழும் வாழ்க்கையில் அமைதி இருக்கலாம்.அது மயான அமைதி.தழுவி வாழும் வாழ்க்கையில் சப்தம் இருக்கலாம் .அது உயிருள்ளது.வாழ்க்கை என்பது சோபனங்களின் சொப்பனங்காக எண்ணி , வாழ்க்கையோடு கோபித்துக் கொண்டு ,முதுகு திருப்பி ,வெறுமை காண்பது ஒரு வித அறியாமையே.நாள் என்பது இருளையும் சேர்த்துதான்;பூ என்பது முள்ளோ/காம்போ சேர்ந்ததுதான்;கடல் என்பது நுரைகளைக் கொண்டதுதான்; வாழ்க்கை என்பது ரணங்கள் சேர்ந்ததுதான்.
சிரிக்க வேண்டும்;அழவும் வேண்டும்.
துய்க்க வேண்டும்;துயரமும் வேண்டும்.
பாசம் வேண்டும்;பகைமையும் வேண்டும்.
எல்லாம் கலந்த கலவைதான் வாழ்க்கை.
தான் மண்ணுக்குள் புதைய சம்மதிக்காவிட்டால்,முளைக்க முடியுமா விதை ?
துயரங்களை ஏற்கப் பழகு;துன்பங்களில் சிரிக்கப் பழகு.
சோகங்களை எரிக்கப் பழகு; கண்ணீரை செரிக்கப் பழகு.
அக்கரைப் பச்சையாகத் தெரியும் அங்குப் போகும் வரை!
ஆக, வந்த வாழ்க்கையை நேசிக்கப் பழகு,வாழப் பழகு!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு