புதன், 19 அக்டோபர், 2016

ஒரு குடும்பத் தலைவிக்கு உயிர் ஒன்று ஆனால் மரணம் இரண்டு! கணவனுக்கு மனைவியாகவும்,பிள்ளைக்குத் தாயாகவும்,இழப்புகள் இரண்டு!
கணவன்:
ஆராரோ,பாடியதாரோ!மீழாத் துயில் கொண்டதாரோ!யாரோ,யாரோ,எனக்கினி யாரோ?என்னில் பாதியே,இது பொய்த்தூக்கமாய் இருக்கக்கூடாதா? நான் தூங்கவே இனி நாட்களாகுமா?
நான் முந்திப் போகவே யோகம் இல்லையே! நீ முந்திப் போனது நியாயமே இல்லையே!
தேவியே நான் செய்தக் குற்றம் என்னக் கூறு?என்னை ஒரு முறையேனும் கண் திறந்துப் பாரு!

பிள்ளை:
பொழுதாகிப் போனதே,இன்னும் தூக்கமா?சொல்லாமல் சென்ற தாயே,இது  நியாயமா?
எனக்கு உயிர் தந்த தேவியே!உனக்கு உயிர்தர என்னால்  முடியவில்லையே!பாலூட்டிப் பார்த்த தெய்வமே! பாலூத்திப் பார்க்க வைத்தாயே,தாயே!அன்னம் போட்ட என் அன்புக்கு, அரிசிபோட வைத்தானே அவன்.... எதற்கு ? எதனாலும்
ஈடு செய்ய முடியாத இந்த இழப்போ, கல்மனங்களைக் கண்ணீரில் கரைத்துப் பிழியும் வலியோ?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு