புதன், 19 அக்டோபர், 2016

எரிமேடையில் கிடத்தப் பட்டிருந்த வாழ்க்கைத் துணையின் உடலைக் கடைசியாக உற்றுப் பார்த்தான் சிவராமன்.இந்த நிரந்தர சோகம்,அவன் நினைத்துப் பார்க்காத நிகழ்வு.ஏதோ ஒரு வலி தன்னுள் ஊர்வதை உணர்ந்தான் அவன்.அவள் உயிரோடு இருந்த போது, அவன் நினைவில் தங்கியதெல்லாம் அவளது குறைகள் மட்டுமே! ஒவ்வொருவரும் மற்றவர் பாசமுகத்தைப் பார்க்க ,அவர்கள் இறக்கும் வரைக் காத்திருக்திறார்கள்! இறந்தவர்களுக்கு,வஞ்சனையின்றி,சாதகம் புரிவது,அவர்கள் மரணம் ஒன்றே! அது தான் அவர்களின் இனிமையான நினைவுகளை மட்டுமே அழைத்து வருகிறது!
பொறுப்பில்லாது சுத்திக் கொண்டிருந்த தன் வாழ்வில்,அவள் வந்த பிறகு ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டதாக,தோன்றியது.தன்னை,தன் குறைகளோடு ஏற்றுக் கொண்டு,ஏற்ற தாழ்வுகளில் தோள் கொடுத்து, உடனிருந்து , கார்,பங்களா வாங்கி .....ச்சே.....இத்தனை உயர்வுகளுக்கு உடனிருந்த ஒரு ஜீவன்,இனி அவ்வளவு தானா? இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறதா? நேற்றுவரை அவள் ஓர் உயிர்!இன்று உடல்! நாளை வெறும் ஒரு சொல் மட்டுமா?ஐயகோ! அவள் நிறைகளுடன் வாழ,இனி ஒரு,வாய்ப்பு கிடைக்காதா?ஷிவ் மனதுக்குன் புலம்பினான் ! இந்த ஞானம் அவள் இறக்குமுன் வந்திருந்தால்...... வாழ்க்கை அர்த்தப் பட்டிருக்குமே என்று ,உடனே,சான்றோன் ஆனான்! நாளை அவளது சாம்பல் ,அவனுக்கு மட்டுமே அளிக்கப் படும் பாக்கியம்! வீடு திரும்பிய அவனுக்காகக் காத்திருந்தது,அவளது போட்டோ.....புதுப் புன்னகையுடன்! இன்று , அந்தப் புன்னகை,அவனுக்கு சரியாகவேப் பட்டது! ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவன் பெற்றான்! அவனுக்குத் துணை புரிந்தது.....வாழ்கைத் துணையின் உயிரற்ற அந்தப் புகைப்படம்!!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு