புதன், 19 அக்டோபர், 2016

கடிகாரம்:

கால்களில் தைக்காத கடிகார முட்களே...நீங்கள்தான் காலத்தின் கால்களோ?
ஓயாது ஓடும் நீ......உழைக்க ஓர் உதாரணமோ?உன் கால்களில் ஒன்று ஏன் குட்டையாய் உள்ளது? ஓ !வாழ்வினில் வரும் ஏற்றத் தாழ்வுகளை எடுத்துக் காட்டதானோ?
ஏய்! காலச்சக்ரவர்த்தியின் கணக்குப் பிள்ளையே.....உன்னைக் கட்டி வைத்தவர்களை, ஓட ஓட விரட்டுவது நியாயமா? சுறுசுறுப்புகள் உன்னை ,ஏன் அவசரக் குடுக்கையாய் ஓடுகிறாய் என்றும்......சோம்பேரிகள் உன்னை ஏன் நகரமாட்டேன் என்கிறாய் என்றும்...... சொன்னால் நீ யார்ப் பேச்சைக் கேட்பாய் பாவம் ! நீ கவலை கொள்ளாதே!உன் பெருமை ஆகாயம் போல!அந்த பூமிப் பெண்ணே ....சுற்றும் ,சந்திரனையும்,சூரியனையும் முட்களாகக் கொண்டக் காலத்தின் கடிகாரமல்லவா!உன் வர்க்கம் .....உறவு! பெருமை கொள்! மகிழ்ச்சி பெறு! வாழ்க !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு