புதன், 19 அக்டோபர், 2016

இறைவா.....!

உன்னிடம் கேட்பதோ சிறிது:
கண்ணீர் கொடு.....பிறர்க்குச் சிந்த!
வேர்வை கொடு....எமக்குச் சிந்த!
சக்தியுள்ள/சந்தர்ப்பமுள்ள பொழுதிலும்.....ஒழுக்கம் காக்கும் உள்ளம் கொடு!தாங்கமுடிந்தத் தோல்வி கொடு!கர்வம் கலக்கா வெற்றி கொடு!மேகங்களும்,கவிதைகளும் அழைத்தால் பொழியும் மழை கொடு! பிடித்த இசையோடு வீசும் காற்று கொடு!மேகத்தின் இடியோ,செய்யாப் பழியோ..... தலையில் விழாத் தடுப்பு கொடு!எல்லோரும் சிரிக்கின்ற வாழ்வு கொடு! எதிரியும் எனக்கழுகும் மரணம் கொடு! அதுவரை வாழ்வின் கோப்பைகளைக்,ஊற்றும் போதே உடைக்காமல்.......நிறைந்த பிறகும் வழியவிடு !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு