புதன், 19 அக்டோபர், 2016

நீ உருவான கதை :

( மருத்துவர் திருத்தவும் )

நான்காம் வாரம் : தண்டுவடம்,நரம்பு மண்டலம் உருவாகும் தருணம்.மழலை அளவு,ஆறு மில்லிமீட்டர்,அதாவது ,கால் அங்குலம்!
ஐந்தாம் வாரம் :ஒரு குண்டூசிக் கொண்டை அளவு தலை ,நான்குப் புள்ளிகளுடன்,கண்கள்,காதுகளுக்கு.
ஆறாம் வாரம்: வாய்,ஜீரண மண்டலத்துடன், இருதயம் உருவாகும்.
ஏழாம் வாரத்தொடக்கத்தில் இருதயம் துடிக்க ஆரம்பித்து வளரும் உருப்புகளுக்கு ரத்தம் அனுப்பியாக வேண்டும்!
எட்டாம் வாரம் ,மழலை அளவு அரை அங்குலம்.அதில் முகம்,கை,கால்கள் முளைக்கும்! பிண்டம் மனித அடையாளம் பெறும்.நரம்பு மண்டலம் முழுமை பெற்று,நாக்குமூக்கு,நுரையீரல்,குடல்,கல்லீரல் ,சிறுநீரகம்,பாலுறுப்பு உண்டாகும்.
பனிரெண்டாம் வாரம் :
மனித உருவத்தில், தலை மட்டும் பெரிதாக.கண்ணிமைகள்,காதுமடல்களுடன்,கைகால்களை அசைத்துப் பார்க்க வேண்டும்!பனிக்குடத்தில் ,நீர் அருந்தி,சிறுநீர்க் கழித்துப் பார்க்கிறது!system test !
பதினாராம் வாரம் உடல்முடியும்,இருபதாம் வாரம் தலைமுடியும் வளரும். மூட்டுவளரும்,ஆண்பெண் வித்தியாசம் உறுப்புகளில் உருவாகும் தருணம்.விழி திறக்காவிடினும்,விரல் சூப்பும்.பிறந்தபின் தாய்ப்பால் பருக,ஒத்திகை.
இருபத்திநான்காவதில் கண்விழிக்கும்,சுவை உணரும்,ஒலி கேட்கும்,கொட்டாவி விடும்.
28ம் வாரம் மூளை பெருவளர்ச்சி பெறும்.
38ம் வாரம்,நகம் முளைக்கும்,பெண்ணுறுப்பு படியும்,ஆண்சிசு விரையிரங்கும்.
இதோ,குழந்தைத் தயார்,தாயாரிடம்.சிற்ப கிரகம் கர்ப்பக் கிரகத்திற்கு விடை சொல்லும் விதம்........ தலைகீழாகத் திரும்பித் தாயாருக்குப் பிரசவ வலியாக......!.ஒன்றாக இருந்ததால் ..... இரண்டாகப் பிரியும்,பிரிவின் வலி......தாயும்,சேயும் அழுகுரல் ஒசை.....தந்தைக்கும்,தாயின் தாய்க்கும் யாழாய் இசைக்கும் !

- இதுவே நீ பிறந்த கதை. வாழ்க!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு