கவலையும்,பயமும் என்னைக் கட்டிப் பிடித்துக் கட்டிலில் கிடத்தியிருந்த வேளை,தயங்கித் தயங்கி ஓர் ஓரமாய் உட்கார்ந்திருந்தது.... நம்பிக்கை!
நகராதிருந்த நம்பிக்கை,என் நிலை காணப் பொறுக்காது....' உள்ளே வரட்டுமா,உதவ ' என்றே கிசுகிசுக்க......பயமும்,கவலையும் பஞ்சினைத் தேடின,என் காதுகள் அடைக்க,கனத்த முயற்சிகளுடன்! குறுக்கீடுகள் தாண்டி உரத்த குரலில் கொடுத்தது,நம்பிக்கை!நண்பா.....விழித்து நீ என்னுடன் எழுந்தால்,விலங்குகள் தானே நொறுங்கும்,புண்ணுக்குப் புன்னகை தடவி,நம்பிக்கை,சொன்ன வார்த்தை மின்சாரம்,நரம்புகளில் பாய்ந்தது!
கவலை,பயங்களை.....ஓரம் விழும்படி,உதறியே எழுந்தேன்! நம்பிக்கை ப் பாய்ந்து வந்து என்னை ஆரத்தழுவிய நேரம்,ஏவிக் கொண்டிருந்த ,கவலையும் பயமும்....எடுபிடி வேலை எங்களுக்குச் செய்யத் தொடங்கின.....வேறு வழியின்றி!தேநீர் வழங்கிய.....கோப்பைகளைக் கழுவச் சென்றன......கவலையும் பயமும்!
சுபம்!
ஆக,
நம்பிக்கை துணை கொண்டு, பயம்,கவலை நீக்கி,
பண்டிகைக் கொண்டாடி மகிழ்வோமாக ! 😀!!
நகராதிருந்த நம்பிக்கை,என் நிலை காணப் பொறுக்காது....' உள்ளே வரட்டுமா,உதவ ' என்றே கிசுகிசுக்க......பயமும்,கவலையும் பஞ்சினைத் தேடின,என் காதுகள் அடைக்க,கனத்த முயற்சிகளுடன்! குறுக்கீடுகள் தாண்டி உரத்த குரலில் கொடுத்தது,நம்பிக்கை!நண்பா.....விழித்து நீ என்னுடன் எழுந்தால்,விலங்குகள் தானே நொறுங்கும்,புண்ணுக்குப் புன்னகை தடவி,நம்பிக்கை,சொன்ன வார்த்தை மின்சாரம்,நரம்புகளில் பாய்ந்தது!
கவலை,பயங்களை.....ஓரம் விழும்படி,உதறியே எழுந்தேன்! நம்பிக்கை ப் பாய்ந்து வந்து என்னை ஆரத்தழுவிய நேரம்,ஏவிக் கொண்டிருந்த ,கவலையும் பயமும்....எடுபிடி வேலை எங்களுக்குச் செய்யத் தொடங்கின.....வேறு வழியின்றி!தேநீர் வழங்கிய.....கோப்பைகளைக் கழுவச் சென்றன......கவலையும் பயமும்!
சுபம்!
ஆக,
நம்பிக்கை துணை கொண்டு, பயம்,கவலை நீக்கி,
பண்டிகைக் கொண்டாடி மகிழ்வோமாக ! 😀!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு