புதன், 19 அக்டோபர், 2016

' எல்லோரும் இந்நாட்டு மந்திரி '

அடிக்கல் நாட்ட அமைச்சர் வந்தார் ! தெருவுக்கெல்லாம் தீபாவளிதான் ! வெளிச்ச வெள்ளம் வீதியெல்லாம் ! ஒரு நாள் கூத்து முடிந்தது! மறுநாள் மறுபடி அமாவாசை இருட்டு தெருவெங்கும் ! எரியாத தெருவிளக்கடியில் மட்டும் பீடி வெளிச்சம் ! வாழ்க ! பீடியும்,பிடிப்போரும் !
மையிருட்டைத் தவிர்த்ததற்காக ! இரு குரல் மட்டும் இருட்டில் !' மந்திரி ,கைதட்டல் பெற்றுப் பேசினாரே,எ ல்லாரும் இந்நாட்டு மன்னராமே ! '

" மன்னருக்கேதப்பா மரியாதை இந்நாளில் ! எல்லாரும் இந்நாட்டு மந்திரி ஆவதெப்போ ?

 வாக்களித்தவன் விரலில் வைக்கும் கரும்புள்ளி,பின்னால் அவன் முகத்தில் பூசவிருக்கும் கரிக்கு ....முன்னுரையல்லவா "

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு