புதன், 19 அக்டோபர், 2016

பயனுள்ள பாடம் :

-இழிந்தோரிடமும் பணிவு கொள்! 'சாக்கடையிலும் பணிவுடன் ஓடும்  நீரைப் போல '

- நாவே, நீ மௌனம் காப்பாய்!
' சத்தமிடும் சில்லரையை உள்ளடக்கியும்,வாயை  மூடியுள்ள சுருக்குப்பை போல '

- ஆயுளே இன்னும் நீள்வாய் !
' பொழுது சாய, நீளும் நிழலாக '

- உடலே ,உறுதி கொள் !
' தன்னிலும் வலியதைத் தாங்கும்,தண்டவாளமாய் '

- உணர்வே கலங்காதே !
' ஊரே அழும்போதும் கலங்கா வெட்டியானாக '

- அறிவே அடக்கம் கொள் !
' எல்லாம் கொண்டும் மௌனம் காக்கும் நூலகமாய் '

- மனமே பற்று அற்றிரு !
' சுற்றும் உலகை சூழ்ந்திருந்தாலும் ,ஒட்டாது உலவும் காற்றாக '

- என்றும் பிரகாச முகம் கொள் !
' என்றும் குறையா ஒளி கொள்ளும் சூரியனாய் '

விழியே,எதிலும் நல்லவை காண்!
' வேப்பம்பூவிலும் தேனைக் காணும் வண்டாக '

பொது நலமே லட்சியம் கொள் !
' ஊருக்கு நிழல் கொடுக்க,தன் தலையில் வெயில் ஏற்கும் விருட்சமாக '

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு