பயனுள்ள பாடம் :
-இழிந்தோரிடமும் பணிவு கொள்! 'சாக்கடையிலும் பணிவுடன் ஓடும் நீரைப் போல '
- நாவே, நீ மௌனம் காப்பாய்!
' சத்தமிடும் சில்லரையை உள்ளடக்கியும்,வாயை மூடியுள்ள சுருக்குப்பை போல '
- ஆயுளே இன்னும் நீள்வாய் !
' பொழுது சாய, நீளும் நிழலாக '
- உடலே ,உறுதி கொள் !
' தன்னிலும் வலியதைத் தாங்கும்,தண்டவாளமாய் '
- உணர்வே கலங்காதே !
' ஊரே அழும்போதும் கலங்கா வெட்டியானாக '
- அறிவே அடக்கம் கொள் !
' எல்லாம் கொண்டும் மௌனம் காக்கும் நூலகமாய் '
- மனமே பற்று அற்றிரு !
' சுற்றும் உலகை சூழ்ந்திருந்தாலும் ,ஒட்டாது உலவும் காற்றாக '
- என்றும் பிரகாச முகம் கொள் !
' என்றும் குறையா ஒளி கொள்ளும் சூரியனாய் '
விழியே,எதிலும் நல்லவை காண்!
' வேப்பம்பூவிலும் தேனைக் காணும் வண்டாக '
பொது நலமே லட்சியம் கொள் !
' ஊருக்கு நிழல் கொடுக்க,தன் தலையில் வெயில் ஏற்கும் விருட்சமாக '
-இழிந்தோரிடமும் பணிவு கொள்! 'சாக்கடையிலும் பணிவுடன் ஓடும் நீரைப் போல '
- நாவே, நீ மௌனம் காப்பாய்!
' சத்தமிடும் சில்லரையை உள்ளடக்கியும்,வாயை மூடியுள்ள சுருக்குப்பை போல '
- ஆயுளே இன்னும் நீள்வாய் !
' பொழுது சாய, நீளும் நிழலாக '
- உடலே ,உறுதி கொள் !
' தன்னிலும் வலியதைத் தாங்கும்,தண்டவாளமாய் '
- உணர்வே கலங்காதே !
' ஊரே அழும்போதும் கலங்கா வெட்டியானாக '
- அறிவே அடக்கம் கொள் !
' எல்லாம் கொண்டும் மௌனம் காக்கும் நூலகமாய் '
- மனமே பற்று அற்றிரு !
' சுற்றும் உலகை சூழ்ந்திருந்தாலும் ,ஒட்டாது உலவும் காற்றாக '
- என்றும் பிரகாச முகம் கொள் !
' என்றும் குறையா ஒளி கொள்ளும் சூரியனாய் '
விழியே,எதிலும் நல்லவை காண்!
' வேப்பம்பூவிலும் தேனைக் காணும் வண்டாக '
பொது நலமே லட்சியம் கொள் !
' ஊருக்கு நிழல் கொடுக்க,தன் தலையில் வெயில் ஏற்கும் விருட்சமாக '
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு