புதன், 19 அக்டோபர், 2016

அன்னையை நினைக்க அன்னையர் தினம் மட்டும் தேவையில்லை:

 அன்னையே! அன்பே! அமுதமே!பஞ்சநாதம் மருமகளாகிப் பஞ்சத்தையும் ஒரு கைப் பார்த்தவளே !வீணையை வீசியெறிந்து,கடமையைக் கையிலெடுத்த கலைமகளே !சரசுவதியே! எங்களைக் கரை சேர்க்க...ஒரு துரையக் கைப்பிடித்தவளே! இடைவெளிக் கம்மியா ஏழப் பெத்தெடுத்து ஒண்ணப் பறி கொடுத்தவளே!இன்னொன்ன நாங்கப் பறி கொடுத்த கதையறிவாயோ...கற்பகமே !எங்க எல்லா வயிறும் பசி பார்க்கக் கூடாதுண்ணு....தன் பசி மறந்தத் தன்னலமற்றத் தியாகமே!தாய்மையின் உதாரணமே!உன் பெருமை எடுத்துச் சொல்ல, அகராதி அனைத்தும் தேடி,வார்த்தையேக் கிடைக்காம வாடியேப் போனேனம்மா!
 மழலைகளைச் சுமந்த உன் மடி.....இந்த மழலைக் கவியைச் சுமந்தால் ஆகாதோ!பாசத்துக்கு பஞ்சம் பாக்காத நீ காசு பணம் பாக்கல்லியே! கரையேத்தினப் புள்ளைங்கெல்லாம் காசுப் பணம் கண்டப்போ...கருணையே இல்லாமக் காணாமப் போனதென்ன....தயவில்லாதத் தாயே !தியாகத்தின் தியாகமே! காசும் பொருளும் உன் காலடிக்கு ஈடாகுமா ? பத்துத் திங்கள் சுமந்தவளே....பத்தரை மாத்துத் தங்கமே! உன் இழப்பை நினச்சாலே ...நெஞ்செல்லாம்...பிசையுதம்மா! நீ பிசைஞ்சூட்டிய சோற்றுருண்டை ருசிக்காக...சரவண பவனும்,ஆனந்த பவனும்,தலப்பாக்கட்டியும் ,தலைகீழாத் தொங்கி...தவமே பண்ணுதம்மா !ததுங்கிணத்தோம் போடுதம்மா !
தாயே! பெத்தவளே ! உன்னப் பக்தி நானெழுதி ஒத்த வரிப் படிக்கல்லியே ! ஒத்த வார்த்த சொல்ல கூட அப்போதே தோணலியே !
 நீ சோகம் சுமந்த காலத்திலும் உன் கண்ணில் இனித்தவளே! கருணைக் கடவுளே! அகரம் அறியா...சிகரமே ! அன்பின் அகராதியே!
மடியில் சேயுறங்கும் போது...சேலைமுனைப்பால் காற்றைத் தடுப்பாயே...காயம்  படுமோ என்று .....அது என்ன ஆரம்பப் பள்ளியறியா... பல்கலைப் படிப்பு ?
புரியாமலே..போய் சேர்ந்த புண்ணியவதியே! வணங்கியே வாழ்கிறோம் ....வாழவைத்த தெய்வமே ! நன்றி!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு