புதன், 21 அக்டோபர், 2015

தன்னம்பிக்கைக்காக

.
பூப்பூக்கும் சத்தம் கேட்டேன்!புல்லின் மீது பனித்துளி ஒன்று புரண்டு படுக்கும் ஒசைக்கேட்டேன்!என்னைச் சுற்றிச் சத்தம் கேட்டேன்!எந்தன் மனதின் மௌனம் கேட்டேன்!உலகம் பூட்டிய இரவுகள் இருக்கு!உதய சூரியனே…தங்கச் சாவி நமக்கு!திறக்கும்படி கல்லைத் திறந்தால் …சிலை ஒன்று காணலாம்!திறமைகள் கொண்டால் சிறை கொண்டப் புழு…சிறகு முளைத்துப் பறவையாகலாம்! ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு திறமை இயற்கையின் கொடைதானே!மழைத்துளி நடுவே நனையாமல் பறக்கும்  பறவை …கொசு…ஒன்றுதானே!
அதற்கே திறமை அவ்வளவு என்றால்……எனக்கும் திறமையுண்டு…வாழ்ந்து காட்டியே……வாழ்வின் வண்ணம் ரசிப்பேன்!!

மகிழ்வூட்டும் எண்ணம் மட்டும் ஏற்பேன்! ரசிக்கவே வாழ்க்கை…அதற்கே மனம் வளர்ப்பேன்! பூஜைநாளும்…அதற்கு உதவட்டும்! வாழ்த்துக்கள்!!😃.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு