சனி, 9 மே, 2015

பிள்ளை கொடுப்பினை!

[5/9, 17:29] Puvanasekar Subramaniam: மரணப்படுக்கையில் புற்றுநோய் கண்டு , விவாகரத்தாகியக் கணவன்.தன் பிள்ளைகளை கடைசியாகக் காண விழைகிறான்.மனைவி அனுப்ப மறுக்கிறாள்! ...........இந்த சூழலில் கணவன் மனநிலைக்கு......ஒரு......கவிதையாக.....(ஆசான்G க.கா.கம்பனுக்கு நன்றி! )

ஆழமான அறிவு கொண்ட பெண்ணே.....என் நீளமான பெயர் உனக்கு நினைவில் உள்ளதா?
இடையில் வந்த காலம் நம்மை இரண்டு செய்தது! இந்தக் கடைசி நேரக்கடிதம் எந்தன் உயிர் சுமந்தது! மரணம் எனும் பாம்பு என்னுள் புற்று வைத்தது! பிள்ளை வரட்டும் என்றே உயிரில் கொஞ்சம் விட்டு வைத்தது! கருகிப்போனபோதும் உந்தன் கணவன் இல்லையா! மரணம் காட்டும் கருணை கூட உனக்கு இல்லையா? கடைசி ஆசை என்னவென்று கைதி சொல்லலாம், கடைசி ஆசை கணவன் சொல்ல உரிமை இல்லையா! நீதிமன்றம் செல்ல எனக்கு நேரம் இல்லையே! இந்த சேதி கண்டும் உந்தன் கண்ணில் ஈரம் இல்லையே! உலக வாழ்வும் உறவும் இங்கே அழகுப் பொய்யடி! என் சலவை செய்த நிலவிரண்டைஅனுப்பிவையடி!
[5/9, 22:46] Puvanasekar Subramaniam: நெஞ்சுக்கூட்டில் இழுக்கும் ஜீவன் நிறைவு காணட்டும்! அது பிஞ்சுப் பூக்கள் பார்த்த பின்பு பிரிந்து போகட்டும்! இறந்த காலம் மீண்டும் எனக்கு இருந்தால் நிம்மதி! பறந்து போனக் கிளியே என்னைப் பார்க்க அனுமதி! சின்னச் சின்ன ஓசைக் கேட்டு சிலிர்த்துக் கொள்கிறேன்!என் வண்ணப்பூக்கள் வந்ததென்று வாரி எழுகிறேன்! கண்டதெல்லாம் கனவு என்று கவிழ்ந்து கொள்கிறேன்!என் கண்ணீர் மட்டும் உண்மை என்று கண்டு கொள்கிறேன்! கொண்ட குழந்தையோடு எனக்குப் பங்கு இல்லையா? அது ரெண்டு ஜீவன் சேர்ந்து செய்த பொம்மை அல்லவா! புற்று நோய்க்கு மருந்து கண்டு போட்டுக் கொள்கிறேன்!நெஞ்சின் பற்றருக்க மருந்து காண காத்திருக்கிறேன்!
வட்ட நிலவு ரெண்டு வருமா என எட்டிப் பார்க்கிறேன்! என் கட்டிலோடு  உயிரை இன்னும் கட்டி வைக்கிறேன்!
இருக்கும்போதே பிள்ளை காண கொடுத்து வைக்கல்ல! நான் இதுவரைக்கும் செஞ்ச பாவம் விட்டுக் கொடுக்கல்ல!
இறந்த காலக் காயமெல்லாம் இன்றே ஆறட்டும்! என் மரணம் மட்டும் மென்மையாக நிகழ்ந்து போகட்டும்!....போய்வருகிறேன் ! மன்னிக்கவும்.........போகி.....றே...ன்....!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு