திங்கள், 18 மே, 2015

ஒரு பூ பூப்பெய்தியது!



முதல்தாரத்தின் மகளுடன் வாழ்ந்து வரும் இளையதாரம்!

அன்னம்மா பெத்தவளே! ஆடுமேய்க்கப் போனவளே!அந்தி மங்குமுன்னே ஆடுவந்த மாயமென்ன!அடியே என் சக்களத்தி! அழாமத்தான் சொல்லேண்டி!
என்ன………சொன்னே………? வாய்க்காக் கரையோரம் வயித்துவலி வந்துடுச்சா! பயந்து நடுங்கையில பாவாடை நனஞ்சுச்சா?
பிஞ்சுப் பழுத்ததென்ன,பேரிழவு வந்ததென்ன! முக்காப் பவுனுக்கே, முன்னூறு குறையுதடி!இந்த லட்சணத்தில் ஏண்டியம்மா குத்தவச்ச! பாவடை சட்டையே அந்த பரமசிவன் கொடுத்த வரம்! சக்களத்தி மவளே நான் தாவணிக்கு என்ன பண்ண! தாவணி வேணுமின்னா, தாய்மாமன் வரவேணும்! தாய்மாமன் வரணுமின்னா, ஜாமீனில் வெளி வரவேணும்!அப்பன் வெறுங்கூடு! ஆத்தாளோக் கருவாடு! இந்த லட்சணத்தில் ஏண்டியம்மா குத்தவச்ச! பதினாறோ பதினேழோ, பாதகத்திக் குத்தவச்சா, பதறாம இருந்திருப்பேன்! பந்தக்கால் போட்டிருப்பேன்!
பதினாலு வயசுக்கே , பத்துமாசம் இருக்கையில, பாவிமக…………குந்திப் புட்டா! ஆளாகி நின்னவள ஆடுமேய்க்கச் சொன்னாக்கா……அப்பன் தடுப்பாக, அடுத்தவுக முறைப்பாக! இந்த ராத்திரிக்கு ராத்திரியே, ரகசியமாத் தலைமுழுகி, நாளைக்கே ஆடோட்டு! யாருக்குந் தெரியாது! ஆடுமேய்க்கப் போகயில அங்கங்கே நிக்காதே!
அடியே ஒஞ்சங்கதிய……ஆட்டுக்குஞ்சொல்லாதே! ஆமா!
- நன்றி. க.கா.க

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு