வெள்ளி, 15 மே, 2015

அறுபத்தைந்தாம் கலை!

கல்வியில் பலவகை!
' நீ மாடு மேய்க்கத்தான்  லாயக்கு ' …………என்று சொன்னால் இழிவா? எவன் சொன்னான் அப்படி?

ஓணான்களின் ஜென்பபூமியான கள்ளிக் காடுகளில்……கற்றாழைக் கதகதப்பில், பாம்புறங்கும் காடுகளில், இலந்தையும் நெருஞ்சியும் இந்திய ஜனத்தொகையாக ப் பெருகியிருக்கும் வனாந்தரத்தில், கால்சட்டைக் கிழிக்கும் காற்றின் வெடவெடப்பில்………மாடுமேய்த்தல்……ஒரு கல்வி/தவம்/ஞானம்! மாடுகள் நுனிப்புல் மேயும் நேரம்……தமிழின் வேர்வரை அங்கு நாமும் மேயலாம்!
கள்ளிமரத்து நிழலில் , கம்பங்கூழுக்குக் காய்ந்த மிளகாய்க் கடித்து உண்ணும் போது ஒரு உண்மை விளங்கும்! ' ருசி என்பது உணவில் இல்லை, பசியில்தான் உள்ளது ' என்பது தெள்ளத் தெளிவாகும்!
 மாடுமேய்த்தல்…ஒரு கல்வி/தவம்/ஞானம்!

அந்த வெயில் உன் ஊனினை உருக்கும்! அந்தத் தனிமை உன் உள்ளொளி பெருக்கும்!பார்வைக்குக் கூர்மை தரும்! மனதுக்கு ஓர்மை தரும்!
ஞானிகனே……ஆய கலைகள் அறுபத்தி நான்கென்றால்……இது………அறுபத்தி ஐந்தாவது ……………புரிகிறதா? மாடுமேய்த்தல்……………
…ஒரு கல்வி/தவம்/ஞானம்!

நன்றி! 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு