[1/18, 10:24 PM] kapun2002: *தெய்வம் கல்லானக் கதை*
( பொறுமையாக படிக்க முடிந்தவர்க்கு ) :
ஒருநாள் விடிகாலைப் பொழுது,தேவலோகத்தில் இறைவன் கண் விழித்தெழுந்தான் ! அவன் முகத்தில் ஒரு வேதனை தெரிந்தது !
அதற்கு ,அவனது பக்தர்களும்,அவர்களது கோரிக்கைகளுமே காரணம் ! அத்தனை பேருக்கும் இறைவன் என்ற வகையில் இன்று பதில் சொல்லியாக வேண்டும் !
இந்த.... மத போதகர்கள்.... *திக்கற்றவர்க்கு தெய்வமே துணை*என்று பிரசங்கிறார்கள் ! அதை நம்பிக் கொண்டு இந்த அப்பாவி ஜனங்களும் ...நீயே கதி என்று என்னிடம் வந்து விடுகிறார்கள் ! நான் என்ன கதியில் இருக்கிறேன் என்பது எனக்குத்தானே தெரியும் !
[1/18, 10:24 PM] kapun2002: ஆமோதிப்பதுபோல் சிரித்தான் காலதேவன் ! நீ சொன்னதுதான் சரி, சிலையாக மாறிவிடு ! மனிதனுக்கு...கஷ்டத்தைக் கொடுக்க ஒரு காலம் வந்ததென்றால்........அதை நீக்கவும் ஒரு காலம் வரும் ! காலத்தின் கணக்கின்படியே சகலமும் நடக்கட்டும் என்று விட்டுவிடு!உனக்கெதற்கு நடுவில் ஒரு !
[1/18, 10:24 PM] kapun2002: அபிஷேகம்/அர்ச்சனை செய்,காணிக்கை செலுத்து ......இதை செய்தால் கடவுள் நீ கேட்பதைக் கொடுப்பார் என்றுவேறு நம்ப வைக்கிறர்கள் ! மக்களும் அதையெல்லாம் செய்துவிட்டு......என்னைக் கொடு....கொடு என்றால்....? அதற்கு நான் எங்கு.....போக !
அலங்காரம் செஞ்சேன்,அங்கப்பிரதட்சணம் செய்தேன்,ஆடை சாத்தினேன் என்றால்........நானா.....கேட்டேன் ! தேவையில்லாம....கடன் பட்டேன் ! இன்று கலங்குகிறேன் ! நான் என்ன .....வைத்துக் கொண்டா இல்லை என்கிறேன் ! மக்களைச் சொல்லிக் குற்றமில்லை...இறைவனிடமே இல்லை என்றால் ......யார்தான் நம்புவார்கள் !
இப்படி தனக்குத் தானே கடவுள் புலம்பிக் கொண்டிருந்தபோது...... *காலதேவன்* அங்கு வந்தான் ! பக்தர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் நிர்கதியாக.....கலங்கிய....கண்களோடு நின்ற கடவுளை....கருணையோடு....விசாரித்தான் ! மிகுந்த உருக்கத்தோடு இறைவன் விவரித்தான் ! காலதேவன் கடவுளுக்கு ஆறுதல் படுத்தி...சொன்னான் : இன்பமோ,துன்பமோ ....ஒவ்வொருவருக்கும் ,அவரவர் வினைப்பயனுக்கேற்ப அவர்கள் கருவிலேயே தீர்மானிக்கப்பட்ட ஒன்று ! சிரிக்கும் வரம் பெற்றவன் சிரிக்கிறான்....அழுகின்ற நேரம் வந்தவர்கள் அழுவார்கள் ! நீ காலத்தின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய அதிகாரிதானே....தவிர....கட்டளையை மாற்றும் அதிகாரம் பெற்றவனல்ல ! இதைக் கேட்ட இறைவனுக்கு எரிச்சல் வந்தது .......அழுது கொண்டிருக்கும் பக்தனோடு.....நானும் சேர்ந்து அழுவதற்குப் பதிலாக ......நான் ஒரு கல்லாக,மண்ணாக ஒரு மூலையில் விழுந்து கிடக்க வேண்டியது தான் !
ஆமோதிப்பதுபோல் சிரித்தான் காலதேவன் ! நீ சொன்னதுதான் சரி, சிலையாக மாறிவிடு ! மனிதனுக்கு...கஷ்டத்தைக் கொடுக்க ஒரு காலம் வந்ததென்றால்........அதை நீக்கவும் ஒரு காலம் வரும் ! காலத்தின் கணக்கின்படியே சகலமும் நடக்கட்டும் என்று விட்டுவிடு!உனக்கெதற்கு நடுவில் ஒரு வேதனை ?
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த இறைவன்.....நீண்ட யோசனைக்குப் பிறகு.....என்ன நினைத்தானோ......எழுந்தான்......தன் ஆலயம் நோக்கி நடந்தான்.....உள்ளே சென்றான்......சிலையாக அமர்ந்து.....வேதனை மீண்டான் !
பக்தர் ஒருவர் ....அங்கம் நனைத்து.....பிரதட்சணத்திற்கு....அவசர அவசரமாக......தயாரானார் !