செவ்வாய், 1 நவம்பர், 2016

காதல் முதல் கல்யாணம் வரை :

கம்மா கரையோரம் களை எடுக்கும் வேளையிலே,கறுப்புக் கொடப்புடிச்சு கரையோரம் போனவனே !அப்ப நிமிந்தவதான் அப்புறமா குனியலியே ! போனது தான் போன, எம் மனசையும் ஏங்கொண்டுபோன ?
போகிற போக்குல ஒரு புஞ்சிரிப்பு ஏஞ்சிரிச்ச ?உயிர்கசக்கி வேரோட புடிங்கி என்ன ,வெயில் தரயில ஏம்போட்ட?
காசநோய்க்காரிகளே கண்ணுறங்கும் வேளையில,ஆசநோய் வந்தமக அரநிமிசம் தூங்கலியே! ஒறங்காதக் கண்ணுறங்க உபாயம் ஒண்ணு உள்ளதய்யா,அழகா,நான் ஒறங்க ஒம்ம அழுக்கு வேட்டி போதுமய்யா! ( த்.....தூ....!...)
தைலந்தான் தேச்சுவச்சேன் ,தலவலியோ தீரலியே ! தலவலியும் தீரவழி ஒண்ணு உள்ளதய்யா!நீ வச்ச தலையணைய நான் வச்சா,தீருமய்யா! ( அய்ய....கருமம் ....! )
சோறுதண்ணி கொள்ள ஒரு சுருக்குவழி உள்ளதய்யா! நீ வந்து எங்கஞ்சிய எச்சிபண்ணி...தாருமய்யா ! ( ச்சீ......வெவஸ்தயில்லாத ஜன்மப்பா.....)
.........இந்தவகைக் கூத்தெல்லாம் ஒரேடியா முறியடிக்க...வேணும் ஒரு திருமணமப்பா !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு