உள்ளொளி:
வருந்தாதே மனமே! வாய்ப்பிழந்து போகவில்லை! வாழ்வை சலவை செய்து,உள்ளே பழுத்திருக்குது மனது!
கடந்திருப்பதோ காலத்தின் ஒரு பகுதி! இன்று தெளிந்தாலும் முழுமை நோக்கியே முதலடி வைக்கலாம்! காலம் உனக்கு சிறகு தந்தது ஈக்களோடு பறக்க அல்ல! தேனிசை பாடும் குயில் நீ! முப்பது நாளும் முட்டையிடும் கோழியல்ல! கருவாட்டுச் சந்தையில் ரோஜா விற்க முயலாதே!உன் போதிமரம் தேடு! அதனடியில் உட்கார் ! உலகக் காற்றை எல்லாம் உள்ளிழு !வாழ்வெனும் கடலை மூச்சு முட்டக் குடி !ஊணினைச் சுருக்கி ,உள்ளொளி பெருக்கு ! ஏழாம் அறிவுக்கு ஏறி வா !உலகம் உன்மீது எறிந்த தூற்றுக்களை தூர எறி ! ஓரிடம் இராதே ! ஓடு....ஓ....டு!ஒரு நாள் நதிக்கரை! ஒரு நாள் மலையடிவாரம் ! ஒரு நாள் ஒரு குகைப் பிளவு ! மறுநாள் ஒரு மரத்தோப்பு ! ஒரு நாள் மக்கள் நாடும் மால் ! மறுநாள் மாம்பலம் !
சுக்குநூறாகி லேசாகட்டும் மனது ! இதுவரை நீயென்று கருதிய நீ ஒழிந்தால் ஒழிய,நீயல்லாத நீதான் இனி நீ ! அன்று தோன்றும் உனக்கு,உலக மானுடம் பருக ஏங்கும் ஞானப்பால் !
வருந்தாதே மனமே! வாய்ப்பிழந்து போகவில்லை! வாழ்வை சலவை செய்து,உள்ளே பழுத்திருக்குது மனது!
கடந்திருப்பதோ காலத்தின் ஒரு பகுதி! இன்று தெளிந்தாலும் முழுமை நோக்கியே முதலடி வைக்கலாம்! காலம் உனக்கு சிறகு தந்தது ஈக்களோடு பறக்க அல்ல! தேனிசை பாடும் குயில் நீ! முப்பது நாளும் முட்டையிடும் கோழியல்ல! கருவாட்டுச் சந்தையில் ரோஜா விற்க முயலாதே!உன் போதிமரம் தேடு! அதனடியில் உட்கார் ! உலகக் காற்றை எல்லாம் உள்ளிழு !வாழ்வெனும் கடலை மூச்சு முட்டக் குடி !ஊணினைச் சுருக்கி ,உள்ளொளி பெருக்கு ! ஏழாம் அறிவுக்கு ஏறி வா !உலகம் உன்மீது எறிந்த தூற்றுக்களை தூர எறி ! ஓரிடம் இராதே ! ஓடு....ஓ....டு!ஒரு நாள் நதிக்கரை! ஒரு நாள் மலையடிவாரம் ! ஒரு நாள் ஒரு குகைப் பிளவு ! மறுநாள் ஒரு மரத்தோப்பு ! ஒரு நாள் மக்கள் நாடும் மால் ! மறுநாள் மாம்பலம் !
சுக்குநூறாகி லேசாகட்டும் மனது ! இதுவரை நீயென்று கருதிய நீ ஒழிந்தால் ஒழிய,நீயல்லாத நீதான் இனி நீ ! அன்று தோன்றும் உனக்கு,உலக மானுடம் பருக ஏங்கும் ஞானப்பால் !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு