புதன், 19 அக்டோபர், 2016

கவியரசின் தத்துவங்கள் :

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்! வாசல் தோறும் வேதனை இருக்கும் ! வந்த துன்பம் எதுவென்றாலும் ,வாடி நின்றால் ஓடுவதில்லை! எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்!
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து,நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு !

தெய்வத்தை நினைவு கொள்ளவே.....நினைப்பதெல்லாம் நடப்பதில்லை!

 நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை ! முடிந்த கதை தொடர்வதில்லை,இறைவன் ஏட்டினிலே!
நடந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே!
எங்கே வாழ்க்கை தொடங்கும்,அது எங்கே எவ்விதம் முடியும்,இதுதான் பாதை,இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது! பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்து விடும்!மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு