கவிதைக் குழந்தை:
அதிகாலை ....கடமை உந்த , கழுவாத முகத்துடன் எழுந்தான் ஆதவன்.வானப் புத்ககம் வாசிக்க ஆளில்லாமல் திறந்தே கிடந்தது. நடைபயில விழையும் நட்டு வைத்த மௌனங்களாக மரங்கள் ஏங்கின.அங்காங்கே உற்சாகமாய் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்களைக் கானகத்தில் மட்டுமல்ல .....காட்டுப்பாக்கத்திலும் காணலாம் ......... மனக்கண்ணால் !
இயற்கையைக் காதலித்து , வந்த வாழ்வை மணந்து கொண்டால்.....கவிதை பிறக்கக் காக்கத் தேவையில்லை! கட்டுப்பாடின்றி ,கணக்கின்றிக் கவிக் குழந்தைகள் பிறக்கும்! கலைந்த தலையும்,முள்ளோடு முகமும்,அழுக்கு லுங்கியும்,ஒரு தடையே அல்ல.....கவிக் குழவிப் பிரசவிக்க கைபேசி ஒன்றே போதும்!படித்த முகங்கள்,பாமர முகங்கள்,கனவு கலையா முகங்கள், கழுவாத முகங்கள்,அ ன்பு முகங்கள்,ஆர்வ முகங்கள்,மழலை முகங்கள்,மாதர் முகங்கள்......ஆக எந்த முகங்களும் ஏற்கவே செய்யும்.....ரசிப்பதற்கு.....மனம்..... தயாரானால்......எதையும்.....கவிதை ....உட்பட ! காண்பீர் இன்றே !
அதிகாலை ....கடமை உந்த , கழுவாத முகத்துடன் எழுந்தான் ஆதவன்.வானப் புத்ககம் வாசிக்க ஆளில்லாமல் திறந்தே கிடந்தது. நடைபயில விழையும் நட்டு வைத்த மௌனங்களாக மரங்கள் ஏங்கின.அங்காங்கே உற்சாகமாய் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் புள்ளினங்களைக் கானகத்தில் மட்டுமல்ல .....காட்டுப்பாக்கத்திலும் காணலாம் ......... மனக்கண்ணால் !
இயற்கையைக் காதலித்து , வந்த வாழ்வை மணந்து கொண்டால்.....கவிதை பிறக்கக் காக்கத் தேவையில்லை! கட்டுப்பாடின்றி ,கணக்கின்றிக் கவிக் குழந்தைகள் பிறக்கும்! கலைந்த தலையும்,முள்ளோடு முகமும்,அழுக்கு லுங்கியும்,ஒரு தடையே அல்ல.....கவிக் குழவிப் பிரசவிக்க கைபேசி ஒன்றே போதும்!படித்த முகங்கள்,பாமர முகங்கள்,கனவு கலையா முகங்கள், கழுவாத முகங்கள்,அ ன்பு முகங்கள்,ஆர்வ முகங்கள்,மழலை முகங்கள்,மாதர் முகங்கள்......ஆக எந்த முகங்களும் ஏற்கவே செய்யும்.....ரசிப்பதற்கு.....மனம்..... தயாரானால்......எதையும்.....கவிதை ....உட்பட ! காண்பீர் இன்றே !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு