*ஏன் கவிதை ?*:
எல்லா உயிர்களுக்கும்,எப்பொழுதும் வாழ்க்கையென்பது,புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை!
பாசிபடர்ந்த குளம் நடுவே பூத்திருக்கும் வசீகரித் தாமரையே வாழ்க்கை! பாசிவிலக்கி வாழ்வின் வசீகரம் கண்டறிந்து,சலிப்பைத் தவிர்த்து வியக்கச் சொல்கிறது கவிதை!மனதகுலம் பயன்படுத்தித் தேய்ந்த வார்த்தைகள் கவிஞனுக்குப் போதுமானதாக இல்லை!ஆகவே,கைக்குச் சிக்கிய கருப்பு வெள்ளை வார்த்தைகளுக்கு வர்ணமடித்துப் பார்க்கிறான் !தேன்குழைத்த மருந்தாக,நிறம் குழைத்த வார்த்தைகள் மொழிக்கு அழகு கூட்டுகிறது !
வாழ்க்கையை ....ஒரு குழந்தை கண் கொண்டு காணவும்,ஒரு ஞானியின் மனம் கொண்டு வாழவும் ..கற்றுக் கொடுக்கும் கவிதை !காலம் காட்டும் இருளையும்...இருள் என்பது ஒரு குறைந்த ஒளி என்றே உன்னை ஊக்குவிக்கும் கவிதை!
முக்கியமாய்க் கவிதைகள் எல்லோருக்காகவும் படைக்கப் பட்டாலும்....அது எல்லோராலும் புரிந்து கொள்ளப் படுவதில்லை !புறமனது மட்டும் கொண்டு வடிக்கப் படுவதில்லை கவிதை!
அகமனதின் பல்வேறு அடுக்குகளில் சஞ்சரித்துப் படைக்கப் பட்டவைகளை...அந்த அடுக்குகளில் சஞ்சரிக்கத் தெரிந்தவர்களால் ரசிக்கப் படுகிறது ! வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு ...தூரங்களும்,இதயங்களும் சுருங்கிப்போன இந்த யுகத்தில் ....நழுவிக்கொண்டிருக்கும் மனிதத்தை இறுக்கிப் பிடித்து நம்பிக்கையூட்டுவன கவிதைகள்!
இனி வரும் மழையில் நனைந்து பார்க்க....இனி மலரப் போகும் மலர்களில் மனம் கரைய.....வானவில் ரசிக்க.....வாழ்வின் வலி தாங்க.....புயலையும்,பூகம்பத்தையும் எதிர்கொள்ள.....சகஉயிர்களை நேசிக்க......சேமித்தக் கண்ணீரை அன்புக்கு செலவழிக்கக் கற்றுத் தருமே...... இந்தக்.....கவிதைகள் !!!
எல்லா உயிர்களுக்கும்,எப்பொழுதும் வாழ்க்கையென்பது,புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதாய் இருப்பதில்லை!
பாசிபடர்ந்த குளம் நடுவே பூத்திருக்கும் வசீகரித் தாமரையே வாழ்க்கை! பாசிவிலக்கி வாழ்வின் வசீகரம் கண்டறிந்து,சலிப்பைத் தவிர்த்து வியக்கச் சொல்கிறது கவிதை!மனதகுலம் பயன்படுத்தித் தேய்ந்த வார்த்தைகள் கவிஞனுக்குப் போதுமானதாக இல்லை!ஆகவே,கைக்குச் சிக்கிய கருப்பு வெள்ளை வார்த்தைகளுக்கு வர்ணமடித்துப் பார்க்கிறான் !தேன்குழைத்த மருந்தாக,நிறம் குழைத்த வார்த்தைகள் மொழிக்கு அழகு கூட்டுகிறது !
வாழ்க்கையை ....ஒரு குழந்தை கண் கொண்டு காணவும்,ஒரு ஞானியின் மனம் கொண்டு வாழவும் ..கற்றுக் கொடுக்கும் கவிதை !காலம் காட்டும் இருளையும்...இருள் என்பது ஒரு குறைந்த ஒளி என்றே உன்னை ஊக்குவிக்கும் கவிதை!
முக்கியமாய்க் கவிதைகள் எல்லோருக்காகவும் படைக்கப் பட்டாலும்....அது எல்லோராலும் புரிந்து கொள்ளப் படுவதில்லை !புறமனது மட்டும் கொண்டு வடிக்கப் படுவதில்லை கவிதை!
அகமனதின் பல்வேறு அடுக்குகளில் சஞ்சரித்துப் படைக்கப் பட்டவைகளை...அந்த அடுக்குகளில் சஞ்சரிக்கத் தெரிந்தவர்களால் ரசிக்கப் படுகிறது ! வேறெந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவுக்கு ...தூரங்களும்,இதயங்களும் சுருங்கிப்போன இந்த யுகத்தில் ....நழுவிக்கொண்டிருக்கும் மனிதத்தை இறுக்கிப் பிடித்து நம்பிக்கையூட்டுவன கவிதைகள்!
இனி வரும் மழையில் நனைந்து பார்க்க....இனி மலரப் போகும் மலர்களில் மனம் கரைய.....வானவில் ரசிக்க.....வாழ்வின் வலி தாங்க.....புயலையும்,பூகம்பத்தையும் எதிர்கொள்ள.....சகஉயிர்களை நேசிக்க......சேமித்தக் கண்ணீரை அன்புக்கு செலவழிக்கக் கற்றுத் தருமே...... இந்தக்.....கவிதைகள் !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு