புதன், 19 ஆகஸ்ட், 2015

வியந்த…பாடல் வரிகள் !

காதலின் அவஸ்த்தை எதிரிக்கும்  வேண்டாம் ! மரண சுகமல்லவா! நெருப்பை விழுங்கி விட்டேன் ! அமிலம் அருந்தி விட்டேன் ! காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள்  பூமிக்கு  வருவதில்லை ! மீறி அவன் பூமி வந்தால் …தாடியுடன்தான் அலைவான்  வீதியிலே!

அன்பே! அன்பே! கொல்லாதே ! கண்ணே  கண்ணைக்  கிள்ளாதே !
பெண்ணே       புன்னகையில் இதயத்தை    வெடிக்காதே!
உன் அசைவினில்   உயிரைக்   குடிக்காதே!
பெண்ணே   ,   உனது  மெல்லிடைப்      பார்த்தேன்  ,  அடடா   பிரம்மன் கஞ்சனடி! சற்றே   நிமிர்ந்தேன்  
தலைசுற்றிப்  போனேன்        ஆஹா அவனே…வள்ளலடி!
மின்னலைப் பிடித்து தூரிகை    சமைத்து ரவிவர்மன்எழுதிய  உருவமடி! நூறடிப் பளிங்கை    ஆறடியாக்கி சிற்பிகள் செதுக்கிய   வதனமடி!
இதுவரை மண்ணில் பிறந்தப் பெண்ணில் நீதான் நீதான் அழகியடி! இத்தனை அழகும் மொத்தம்   சேர்ந்து   என்னை      வதைப்பது கொடுமையடி      !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு