வாழ்ந்து காட்டுகிறேன்!
வாழப்பிறந்தேன்!
புல்லில் நடந்துப் பூப்பறிப்பதல்ல……வாழ்க்கை! முள்ளைக் கடந்து கனிபறிப்பது!
வாழப்பிறந்ததால் வாழ்ந்து காட்டுகிறேன்!வாழ்க்கை என்னை கேலி செய்தாலும் வாழ்ந்து காட்டுவேன்!
மழையோ,வெயிலோ,தென்றலோ,புயலோ,இரவோ,பகலோ,உறவோ,பகையோ…வாழ்ந்து காட்டுகிறேன்!
வாழ்க்கைஒரு சோலைவனமானால் …மலர்ந்துக் காட்டுகிறேன்! வாழ்க்கை ஒரு பாலைவனமா …கடந்து காட்டுகிறேன்!
வாழ்க்கைஎன்பது கண்ணீரானால் …துடைத்துக் காட்டுகிறேன்! வாழ்க்கை என்பது பந்தயமானால் …ஜெயித்துக் காட்டுகிறேன்!
கறையும் கொண்டது நிலவு! முள்ளும் உடையது ரோஜா! இருளும் கொண்டது நாள்! துயரும் சேர்ந்ததே வாழ்க்கை! துன்பத்தை எல்லாம் எருவாக்கி…இன்பத்தை வாழ்வில் உருவாக்கி……வாழ்ந்து காட்டுகிறேன்!
கண்ணீருக்கு……இனி கைகுட்டை……தேடாமல்……காரணம் தேடியே………வென்றிடுவேன்!!!
புல்லில் நடந்துப் பூப்பறிப்பதல்ல……வாழ்க்கை! முள்ளைக் கடந்து கனிபறிப்பது!
வாழப்பிறந்ததால் வாழ்ந்து காட்டுகிறேன்!வாழ்க்கை என்னை கேலி செய்தாலும் வாழ்ந்து காட்டுவேன்!
மழையோ,வெயிலோ,தென்றலோ,புயலோ,இரவோ,பகலோ,உறவோ,பகையோ…வாழ்ந்து காட்டுகிறேன்!
வாழ்க்கைஒரு சோலைவனமானால் …மலர்ந்துக் காட்டுகிறேன்! வாழ்க்கை ஒரு பாலைவனமா …கடந்து காட்டுகிறேன்!
வாழ்க்கைஎன்பது கண்ணீரானால் …துடைத்துக் காட்டுகிறேன்! வாழ்க்கை என்பது பந்தயமானால் …ஜெயித்துக் காட்டுகிறேன்!
கறையும் கொண்டது நிலவு! முள்ளும் உடையது ரோஜா! இருளும் கொண்டது நாள்! துயரும் சேர்ந்ததே வாழ்க்கை! துன்பத்தை எல்லாம் எருவாக்கி…இன்பத்தை வாழ்வில் உருவாக்கி……வாழ்ந்து காட்டுகிறேன்!
கண்ணீருக்கு……இனி கைகுட்டை……தேடாமல்……காரணம் தேடியே………வென்றிடுவேன்!!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு