செவ்வாய், 26 மே, 2015

வாழ்வியல் நியதி !

#
கவலைப்படு மனிதா…………நீ கவலை கொள்ளவே பிறந்தாய்! கவலை கொள்!
மழையில் நனையும் கடலைக் கண்டு கவலை கொள்ளாது போனால் எப்படி? கவலை கொள்! சமுத்திரம் சங்குக்குள் குதித்து மறைவதாகக் கவலைவருதா? கவலை கொள்!கவலையே இல்லையென்றாலும் அதே ஒரு கவலையாகக் கவலை கொள்! தவறொன்றும் இல்லை!

பிறவி என்பது பெருங்கடல் கிடையாது! எண்ணிப் பார்த்தால் அது ஒரு சிறிய வாய்க்கால்!கரை தொடும் முன்னே கரைந்தவர் பலர்!கரையைத்தொட்டுக் கடந்தவர் சிலர்!மனிதக் கணக்கில் வாழ்வுபெரிது! காலக்கணக்கில் வாழ்நாள் சிறிது!
ஆதலால் மனிதா……! இருக்கும் நாட்களை இரட்டிப்பாக்கு!
சூரியன் ,நிலவு இரண்டிலும் விழித்திரு! படுக்கைப் போட்டுத் துயில் கொள்ளாதே! துயில் வரும் போது படுக்கைப் போடு! காலையில் பூமியை உள் துளையிட்டு……மாலையில் பூமியின் மறுபுறம் வெளிப்படு!மனித உள்ளம் ஒரு காலிக் கோப்பை, அதை லட்சியங்களால் மட்டும்  நிரப்பு!விண்ணும் மண்ணும் வெற்றியின் இலக்கு! செவ்வாய்க் கிரகம் சீக்கிரம் உனக்கு! வாழியவே! #

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு